லக்னோ, ஆக. 29 -
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம், மன்சூர்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் குப்பாபூர். இங்கு ‘நேஹா பப்ளிக் ஸ்கூல்’ என்ற தனியார் பள்ளியை நடத்தி வருபவர் திராப்தி தியாகி ஆவார்.
இவர், 7 வயதேயாகும் 2-ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவனை மதத்தைக் குறிப்பிட்டு விமர் சித்ததுடன், இந்து மாணவர் களை வைத்து, அந்த முஸ்லிம் சிறுவனை, கன்னத் தில் மாறி மாறி அறையச் செய்த வீடியோ, அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கடும் கண்டனங் களும் எழுந்தன.
இதையடுத்து, சம்பந்தப் பட்ட ஆசிரியை திராப்தி தியாகி மீது இந்திய தண்ட னைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். எனினும், அவரைக் கைது செய்ய வில்லை.
ஆனால், முஸ்லிம் சிறுவன் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிட்டதற்காக, செய்தி யின் உண்மைத் தன்மை யைக் கண்டறியும் ‘ஆல்ட் நியூஸ்’ என்ற இணைய தளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜூபைர் மீது, உ.பி. பாஜக அரசின் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.